புதுச்சேரி, ஏப்.25- புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தோற்று பாதிக்கப்பட்டு 8 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மாகி பிரதேசத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 72 வயதான முதியவர் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மேலும் கதிர்காமத்தில் அமைந்துள்ள புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக் கப்பட்டிருந்த தனி வார்டில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. அதில் மாகி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி உட்பட 4 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் மூல குளம் அன்னை தெரேசா நகரை சேர்ந்த ஒருவரின் மகனுக்கு (18) தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தோற்று பாதிக்கப் பட்டவர் கள் எண்ணிக்கை புதுச்சேரியில் 9 ஆக உயர்ந்துள்ளது.