ஒடிசா மாநிலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 50 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான அம்பன் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கடந்த மே 21-ஆம் தேதி கரையை கடந்தது. இந்த புயலில் சிக்கி 98 பேர் பலியாகினர். மேலும், பல்லாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் சேதமடைந்தது. இந்த சேதங்களை சரிசெய்ய, தேசிய பேரிடர் மேலாண் மீட்பு படையினரை மத்திய அரசு மேற்கு வங்கத்திற்கு அனுப்பியது. மீட்பு நடவடிக்கைகள் முடிந்த நிலையில், 178 வீரர்கள் பேர் ஒடிசாவில் உள்ள கட்டாக் நகருக்கு திரும்பியுள்ளனர்.
அவர்களில் சிலருக்கு கோவிட்-19 அறிகுறிகள் இருப்பதையடுத்து, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 50 வீரர்கள் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கட்டாக்கில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.