tamilnadu

img

மத்திய அரசு ஒதுக்கிய தொகையைக்கூட செலவழிக்காமல் திருப்பி அனுப்புவதா?

சென்னை, ஆக. 3- மத்திய அரசால் வளர்ச்சித்  திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைக்கூட செலவழிக்கா மல் தொகையைத் திருப்பி அனுப்பும் செயல்படாத அரசாக தமிழ்நாடு அரசு இருப்பதற்குக் திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கையில் உள்ளாட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து தள்ளிப் போட்டுக்கொண்டே போவதால், அதற்குரிய நிதி  சுமார் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் கொடுப்பதை நிறுத்தி வைத்  துள்ளோம் என்று மத்திய அரசு கூறுகிறது. நிதிப்பற்றாக்குறை நெருக்கடியில் கூட மத்திய அரசு  ஒதுக்கும் குறைந்த தொகையை கூட தில்லிக்கே திருப்பி அனுப்பும்  ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி உள்ளது.

மத்திய கணக்குத் தணிக்கை யாளர் (சி.ஏ.ஜி)அறிக்கைப்படி 2017-2018 இல் மத்திய  அரசு மக்  கள் நலத் திட்டங்களுக்காக அனுப்  பிய 5,920 கோடி ரூபாயில் 3,076.55  கோடியை செலவழிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளது. இது எதற்காகத் தரப்பட்டது தெரியுமா? ஏழை, எஸ்.சி., எஸ்.டி., தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்க ளுக்கு வீடு கட்டிக் கொடுக்க அனுப்பப்பட்ட தொகை! என்ன காரணம்? அவர்களை உரிய முறையில் அடையாளம் காண முடியவில்லையாம்! அதனால் நிதியை, மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.  பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில்  வீடற்றவர் களுக்கு வீடு கட்டித் தர ஒதுக்கீடு -  2,394 கோடி ரூபாய் திருப்பி அனுப்பப்பட்டது.  கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அடிப்படை வசதி செய்து தருவதற்கான தொகையை செலவிடாது திருப்பி அனுப்பியது - 758 கோடி  ரூபாய்.

100 நாள் வேலைத் திட்டம் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்) அதில்  திருப்பி அனுப்பப்பட்ட தொகை 247.84 கோடி ரூபாய்.கிராம வளர்ச்சிக்காக தரப்பட்ட தொகை 194.78 கோடி ரூபாய் - திருப்பி அனுப்பப்பட்டது. கிராமத் தொழில்களை வளர்ப்பதென்றே - வேலை வாய்ப்புகளைப் பெருக்கவென்றே ஒதுக்கப்பட்ட நிலையில் (திருப்பி அனுப்பப் பட்ட) தொகை 97.95 கோடி  ரூபாய்.தமிழ்நாட்டுப் பெண்க ளின் வளர்ச்சி - சுய உதவிக்  குழுக்களுக்கு என ஒதுக்கப்பட்டு  செலவழிக்காமல் மத்திய அர சுக்கு அனுப்பப்பட்ட தொகை ரூ.23.84 கோடி! இப்படி பல அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்கள். உலக வங்கி தமிழ்நாடு கிராம வாழ்க்கையை மாற்றும் திட்டத்திற்காக தந்த மானியத் தொகை ரூ.100 கோடி. அதில் செலவு செய்த தொகை (மாநில அரசால்) எவ்வளவு தெரி யுமா? வெறும் 2.35 கோடி ரூபாய். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.