tamilnadu

img

100 நாள் வேலைக்கு சங்கு ஊதுவதா? -தஞ்சை க.அபிமன்னன்

பருவமழை குறைந்ததும், காவிரி நதிநீர் பிரச்சனையால் மேட்டூர் அணை காலத்தில் திறக்கப்படாததால் குறுவை, சம்பா, தாளடி முப்போகம் சாகுபடி குறைந்து ஒருபோக சாகுபடியாக  விவசாயம் குறைந்தது. விவ சாய விளை பொருட்களுக்கு கட்டுப்படி யான விலை இல்லை ஆனால் இரசாயன இடுபொருள்களின் விலை கட்டுக்கடங்கா மல் போனதும் மத்திய அரசு விவசாயிக்கு வழங்கி வந்த மானியத் தொகையை சரி பாதியாக குறைத்ததும் என விவசாயிகள் மேலும் மேலும் துயரத்தின் பிடியில் தள்ளப் பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து விவசா யத்தில் நஷ்டம் ஆனதால் விலை நிலங்களை தரிசாக போடுகிற நிலையும் ரியல் எஸ்டேட் காரர்களிடம் கைமாறி நிலங்கள் கட்ட டங்களாகவும் வெட்ட வெளிகளாகவும் மாறி வரும் நிலையில், பண்ணை விவசாயமாக மாறி பணப்பயிர் சாகுபடியானதும் விவசாய பணிகள் முழுக்க முழுக்க இயந்திரமயமா னது. விவசாய பணிகளில் மனித உழைப்பு மறுக்கப்பட்டது. போராடி பொலியடி வேலைகள் புதைந்து போனது. விவசாய கூலித் தொழிலாளிகளுக்கு பிழைப்பும் கேள்விக்குறியானது.  விவசாயத் தொழிலாளிகள் வாழ்க்கை உத்தரவாதமானதாக இருந்த காலம் மாறி இன்று மாற்றுப் பணிகளைத் தேடி ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். விவசாயத்தை  நம்பி வாழ்ந்த மக்களுக்கு வேறு பணிகளில் அனுபவம் இல்லை. இந்த சூழ்நிலையில் கிராமப்புற மக்கள் நகர்ப்புறத்தை நோக்கி கட்டுமான பணிக ளுக்கு  குறைந்த கூலிக்கு சென்று வரும் நிலை அதிலும் வேலை நெருக்கடி; இன்று தனக்கு வேலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு விடியற்காலையில் எழுந்து வீட்டில்  இருக்கும் பழைய சோற்றை எடுத்துக் கொண்டு நகர்ப்புறத்தை நோக்கி ஓடு வதும் அங்கு வேலை கிடைக்காமல் பெரும்பாலான மக்கள் கொண்டுபோன சோற்றோடு வீடு திரும்பும் போது அவர்கள் படும் வேதனையும் சொல்லி மாளாது.  “இந்த பின்னணியில்தான் இடதுசாரிகள் தொடர்ந்து போராடிவந்ததன் பயன் 2003 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையில் அமைந்த மத்திய அரசிடம் இடதுசாரிகள் முன்வைத்த முதல் கோரிக்கையான - நிபந்தனையான ஏழ்மையில் வாடும் கிராமப்புற மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதைப் பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

 மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி யளிப்புச் சட்டம், மத்திய அரசு 2003ல் கொண்டு வந்தது. நாடு முழுமையும் 2006-ல் அமல்படுத்தியதால் கிராமப்புற ஏழை மக்கள் ஓரளவு வாழ்க்கை நடத்த உதவியாக அமைந்தது. ஒரு குடும்பத்திற்கு 100 நாள் மட்டும் வேலை என்றார்கள். அதிலும் இடதுசாரிகள் ஆண்ட மேற்கு வங்கம் திரிபுரா, கேரளம் போன்ற மாநிலங்களில் 98% வேலை நாட்கள் வழங்கப்பட்டது என்று மத்திய ஆய்வு அறிக்கையே கூறி யதைப் பார்க்க முடிந்தது. தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 40 நாட்கள் தான் வேலை கொடுக் கப்படுகிறது. அதிலும் கூலி என்பது 40 ரூபாயாக கபளீகரம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தநிலையில், இடதுசாரி கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வரு கின்றனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு மத்திய அரசு 229 ரூபாய் என்று அறிவித்தும் மாநில அரசை முழுசம்பளத்தை கொடுக்க முன்வராமல் 140 முதல் 170 வரை கூலி யாக கொடுக்கின்றது. இந்த பணமும் வங்கி யில் 2 மாதம் முதல் 4 மாதம் வரையிலும் ஏற்றப்படாமல் இருந்து வருகிறது. அதிலும் வேடிக்கை ஆதார் கார்டு எண்கள் தவ றாக பதிவு செய்வதால் வேலை செய்தவன் வேதனையிலும் வேலை செய்யாதவன் கணக்கில் பணம் ஏறுவதும் வேடிக்கையான விஷயமாக இருப்பதும் பார்க்க முடிகிறது.  2017 – 2018 ஆம் ஆண்டிற்கான 100 நாள் வேலை நிதியை எந்த அளவிற்கு மோசடி செய்ய வேண்டுமோ அந்த அளவிற்கு  59%  நிதியை கட்டுமான தளவாட சாமான்கள் வாங்கவும் 41% த்தை கூலியாகவும் மடை மாற்றம் செய்வதால் மக்கள் மீண்டும் சிர மத்திற்கு ஆளாகி வருகிறார்கள். எனவே வேலைநாள் 200 நாளாக அறிவிக்க வேண்டும்; கூலி ரூபாய் 400 வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுமையும் விவசாயத் தொழிலாளர்கள்  தொடர்ந்து போராட்டங் கள் நடந்தி  வருகின்றார்கள்.

2019-2020 ஆண்டிற்கான பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக கிராமப்புற வேலைக் கான நிதி ரூபாய் 60 ஆயிரம் கோடியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்றைக்கு கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் அதல பாதாளத்தில் இருக்கும் நிலையில்  யானை பசிக்கு சோளப்பொறியாகத்தான் இருக்கு மே தவிர அவர்களுடைய வறுமையை ஒழிக்க போதுமானதாக 100 நாள் வேலை இருக்காது.  2019- 2020 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்த வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியிருப்பது கடந்த ஆண்டு களை விட நடப்பாண்டிற்கு 5000 கோடி ரூபாய் கூடுதல்படுத்தி 60,000 ஆயிரம் கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு, நாட்டில் வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதால் 100 நாள் வேலை நாட்டில் ரொம்ப காலம் நிலைக்காது என்றும் கூறியிருப்பது அபத்த மானது. வேலையிழந்த மக்களுக்கு, வாழ வழியற்ற கிராமப்புற மக்களுக்கு ஆதரவாக இடதுசாரிகள் போராடி பெற்ற 100 நாள் வேலையையும் இன்று மோடி கூட்டம் வறுமையை ஒழிக்க போறோம் என்று சங்கு ஊதி குழிதோன்டி புதைக்க திட்டமிட்டு உள்ளார்கள். இக்கொடுமையை தடுத்திட கோடிக்கால் பூதமாய் உழைப்பாளி மக்களை திரட்டி போராட வேண்டிய கடமை நம்முன் உள்ளது.