tamilnadu

நிறம் மாறிய கொள்ளிடம் ஆற்று நீர்

சீர்காழி, நவ.12- நாகை மாவட்டம் கொள்ளி டம் ஆற்று நீர் கடந்த ஒரு மாத காலமாக நிறம் மாறி பச்சையாக வந்து கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டி காட்டூர், மகேந்திரப்பள்ளி, அளக்குடி, முதலைமேடு, பில் படுகை, திட்டுப்படுகை, சந்தப் படுகை, குத்தவக்கரை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.  இந்த அனைத்து கிராமங்க ளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொள்ளி டம் ஆற்றை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். குளிப்பதற்கும், கால்நடைகள் குடிப்பதற்கும் இந்த கொள்ளிடம் ஆற்று நீர் விவசா யிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

மழைக்காலத்தின் போதும் மேட்டூரிலிருந்து தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றும் போதும் ஆற்று நீர் நல்ல நீராக இருப்பதால் இந்த நீர் பொதுமக்களுக்கு அதிகம் பயன் படுவதாக உள்ளது. பின்னர் உப்பு நீராக மாறிவிடுவதால் அதன் பயன்பாடு குறைகிறது.  ஆனால் கடந்த ஒரு மாத காலமாக கொள்ளிடம் ஆற்றில் நல்ல தண்ணீர் வந்து கொண்டி ருப்பதால் கரையோர கிராம மக்கள் குளிப்பதற்கும் கால்நடை கள் குடிப்பதற்கும் துணிகளை சலவை செய்வதற்கும் இந்த கொள்ளிடம் ஆற்றின் நீரையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் எப்பொழுதோ வெளி யேற்றப்படும் கழிவு நீராலும் ரசாயன நீராலும் கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் பச்சையாக மாறி விடுகிறது. எல்லா நோய்க ளுக்கும் சுகாதாரம் இல்லாத தண்ணீரே காரணமாக அமைவ தால் பொதுமக்களின் நன்மைக் கருதி கொள்ளிடம் ஆற்று நீரை உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சந்தப்படுகயைச் சேர்ந்த ராஜவேலு மற்றும் பொது மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.