tamilnadu

ரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அமைச்சர் தகவல்

சென்னை,  ஜூன் 7 ரேசன் கடை ஊழியர்க ளுக்கு சம்பள உயர்வு அளிப்  பது குறித்து குழு பரிந்துரை அரசுக்கு கிடைத்ததும் அறி விப்பு வெளியிடப்படும்  என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். புதுவண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கூட்டுறவு  சங்கம் சார்பில் பெட்ரோல்  நிலையம் அமைக்கப்பட்டுள் ளது.  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  இந்த பெட்ரோல் நிலை யத்தை  திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ கூட்டுறவுத்துறை சார்பில் பொது மக்களுக்கு பல்வேறு பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. தமிழ் நாட்டில் கூட்டுறவுத்துறை 27 பெட்ரோல் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது. இது 28-வது நிலை யம். இன்னும் 13 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம்  தரமான, அளவு குறையாத பெட்ரோல், டீசல் விற்கப்படு கின்றன. இதற்கு மக்களிடம்  நல்ல வரவேற்பு கிடைத்துள் ளது. மக்களுக்கு தேவையான மேலும் பல பொருட்களை கூட்டுறவு துறை சார்பில் விற்பனை செய்ய திட்ட மிடப்பட்டுள்ளன. ரேசன் கடைகளில் கூடுதல் பொருட்  களை வாங்கும்படி வற்புறுத்  தக்கூடாது. எடை குறையா மல் பொருட்களை வழங்க  வேண்டும். இது தொடர்பான புகார்கள் வந்தால் ஊழி யர்கள் மீதும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவ டிக்கை எடுக்கப்படும். ரேசன் கடை ஊழியர்க ளுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து முடிவு  செய்ய குழு அமைக்கப் பட்டுள்ளது. அதன் பரிந் துரை அரசுக்கு கிடைத்ததும் சம்பள உயர்வு பற்றிய அறி விப்பு வெளியாகும். மும் மொழிக் கொள்கையை அதி முக அரசு  எதிர்க்கிறது என்  றார் அமைச்சர் ராஜூ.