சென்னை, நவ.12- தமிழகத்தில் டிசம்பர் 27,28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர் தலை நடத்த மாநில தேர்தல் ஆணை யம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி-கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடு பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலின் போது பணியாற்றக்கூடிய 6 லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை, மாநில தேர்தல் ஆணை யம் உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரி களுடன் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய ஆலோச னைக் கூட்டத்தில் பள்ளிக் கல்லூரி களின் தேர்வு அட்டவணைகளும் கோரப்பட்டுள்ளன. அதன்படி தேர்வுகள் முடிந்த பின்னர் உள்ளாட்சித்தேர்தலை நடத்தலாம் என திட்டமிட்டுள்ள தேர் தல் ஆணையம். தேர்வுக்கு பின்னர் தேர்தலை நடத்தும் வகையில் அட்ட வணைகளை தயாரிக்கும் பணி களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தல் நடத்த வசதியாக அரை யாண்டுத் தேர்வை டிசம்பர் 23 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி தலைமை யில் மாநில தேர்தல் ஆணையரு டன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர் தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக் கப்பட்டதாக கூறப்படுகிறது.