சென்னை ஏப்.10- தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடி யாமல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலேயே தங்க வைக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடு களிலேயே குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுகிறார் கள். ஆனால் கொரோனா வைர சுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் குடும்பத்தை விட்டு ஒதுங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக பரவலைத் தடுப்ப தற்காக அவர்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்காமல் மருத்து வமனையிலேயே தங்கவைக்கப் பட்டு உள்ளனர். ஆரம்பக் கட்டத்தில் அவர்கள் வீடு களுக்குச் சென்று வந்தார்கள். தற்போது வேகமாக இந்த நோய்த் தொற்று பரவி வரு கிறது. எனவே சமூக பரவலைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. அவர்கள் தங்குவதற்குத் தற்கா லிகமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் வீடு களுக்கு அனுப்பப்படாமல் அங்கேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் ஆர்.ஜெயந்தி கூறிய தாவது:-
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் “டவர்- 3” பில்டிங்கில் கட்டாய சுழற்சி குடி யிருப்பு உள்ளது. இங்கு 120 அறைகள் உள்ளன. இதில் மருத்துவர்கள் தங்கவைக்கப் பட்டுள்ளனர். இதன் அருகே உள்ள குடியிருப்பில் செவிலி யர்கள் தங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஐந்து நாட்கள் வேலை. அடுத்த 5 நாட்களுக்கு ஓய்வு. ஓய்வு நாட்களில் அவர்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதேபோல கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் வீடுகளுக்கு அனுப்பாமல் தங்கவைக்கப் பட்டு உள்ளனர்.