tamilnadu

img

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2- தேர்வு முறைகேடு : விசாரணை அதிகாரிகள் நியமனம்

சென்னை,பிப்.1- மின்வாரியம், குடிநீர்,பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றில் இளநிலை மற்றும் உதவி பொறியாளர்கள் நியமனம் குரூப்-2 தேர்வு மூலம் நேரடியாக நடத்தப்படுகிறது. டிஎன்பி எஸ்சி குருப் 4 தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து,2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குருப்-2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே குருப் 4 தேர்வு முறை கேட்டில் தலைமறைவான இடைத்தரகர் ஜெயக்குமார் பற்றி அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 நபர்களிடம் நடத்திய விசாரணை யின் அடிப்படையில் ஜெயகுமாரை பிடிக்க காவல்துறையினர் ஆந்திரா விரைந்துள்ள துடன், மேல்மருவத்தூர் பகுதியிலும் தேடி வரு கிறார்கள்.

;