திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால் பொன்னேரி, திருவள்ளூர், கும்மிடிபூண்டி உள்ளிட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் வாகன, ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன. ஊரடங்கை மீறி வரும் இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்கின்றனர். பிற பகுதிகளிலிருந்து வரும் நான்கு சக்கர வாகனங்ககளை மாவட்ட எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.