tamilnadu

img

சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்களே சீர்குலைவுவாதிகளாக... ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து முழு அடைப்பு நடத்த வேண்டும் என்ற வழக்கறிஞர் ஆர்.வைகை முன்மொழிந்ததை வழிமொழிகிறேன். அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான எந்த சட்டத்தையும் அமல்படுத்தமாட்டோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அந்த சட்டத்தை முறியடிக்க தேவையான போராட்டங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்போம். தமிழகத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்களாக வாழ்கின்றனர். ஆனால் மதரீதியாக மக்களை பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளின் ஒருபகுதிதான் குடியுரிமை திருத்தச் சட்டம். ஒரு சட்டம் சிறந்ததாக இருந்தாலும், அதை அமலாக்குகிறவர்கள் சீர்குலைவுவாதிகளாக இருந்தால் அந்த சட்டத்தை பாதுகாக்க முடியாது என்று அண்ணல் அம்பேத்கர் கூறினார். அதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தை, உரிமையை பாதுகாக்க ஜனவரி 8 அன்று பொதுவேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதேபோன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும்.

;