சென்னை, ஜூலை 19 - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்திற்கு திமுக, அதிமுக இரு ஆட்சியிலும் முழுநேர இயக்குநர் நியமிக்கப்படவில்லை என்று தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வியாழனன்று (ஜூலை 18) நடைபெற்றது. இதில் பேசிய திமுக உறுப்பினர் ரவிச்சந்திரன், “செம் மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு முழுநேர இயக்குநர் இல்லை என்றும் அது முடக்கப்பட்டுள்ளது” என்றும் கூறினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் க.பாண்டியராஜன், “சென்னை அருகே 6.5 ஏக்கர் பரப்பில் ரூ. 24 கோடியில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்திற்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது” என்றார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு (திமுக), “செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநர் நிய மிக்கப்படுவார் என்று கடந்த ஆண்டு கூறப்பட்ட அதே பதிலை மீண்டும் கூறுகிறீர்கள். அந்நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்த முயற்சிக்கிறீர் களா? என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், திமுக, அதிமுக இரு ஆட்சியிலுமே முழுநேர இயக்குநர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பாளர்கள்தான் நியமிக்கப் பட்டனர். தமிழறிஞர் ஒருவர் முழு நேர இயக்குநராக விரைவில் நிய மிக்கப்படுவார்” என்றார்.