நீலகிரி,நவ.30- மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில் 14 நாட்களுக்கு பிறகு சனிக்கிழமையன்று முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது. நீலகிரி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரயில் பாதையில் கல்லாறு குன்னூர் ரயில் நிலையங்கள் இடையே 23-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் போக்குவரத்து நவம்பர் 16 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 14 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. சீரமைக்கும் பணி அனைத்தும் வெள்ளியன்று நிறைவ டைந்தது. இதனைத்தொடர்ந்து மேட்டுப் பாளையம் - ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப் பாளையம் மலைரயில் போக்குவரத்து14 நாட்களுக்கு பின்னர் சனிக்கிழமையன்று முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது.