பாட்னா, ஏப்.22- பீகாரில் அதிகாரி வாகனத்தை தடுத்து நிறுத்தியதற் காக, ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவரை கட்டா யப்படுத்தி 50 முறை தோப்புக்கரணம் போட வைத்த சம்ப வம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக மே 3-ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகள் தவிர மக்கள் வெளியே நடமாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பீகாரின் அரேரியா மாவட்டம் ஜோகி ஹாட் காவல் எல்லைக்குட்பட்ட சூரஜ்பூர் புல் பாலம் அருகே பணியில் இருந்த ஊர்க்காவல் படையைச் கணேஷ் லால் தத்மா, மாவட்ட வேளாண் அதிகாரி மனோஜ் குமார் காரை நிறுத்தி, உரிய அனுமதி இருக்கிறதா எனக் கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த மனோஜ்குமார், ஊர்ப்படைக் காவலர் கணேஷ் லாலை கடுமையாகப் பேசி 50 முறை தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை கிளப்பி யுள்ளது. சம்பவம் உண்மையா என மனோஜ்குமாரை தொடர்பு கொண்டபோது, இரண்டு நிமிடம் கழித்து தம்மை தொடர்பு கொள்ளுமாறு கூறினார். அதற்குப் பின் அவர் செல் போனை எடுக்கவில்லை.