tamilnadu

img

குளத்தில் கண்டறியப்பட்ட அழிந்து வரும் ஆமை இனம்

கோவை, ஆக.10- அழிந்துவரும் ஆமை இனங்களில் ஒன்றான பால் ஆமை கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் தென்பட்டது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் அமைந் துள்ள குளக்கரையில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறன்று கியூப் அமைப்பச்சேர்ந்த தன்னார்வ லர்கள் எறும்பு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்டு  வருகின்றனர். இந்நிலையில், தன்னார்வலர் சதீஸ் என்பவர் அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்த போது பால் ஆமை தென்பட்டுள்ளது. இதுகுறித்து கியூப் அமைப்பினர் கூறியதாவது: வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பட்டியல் 1ல் பால் ஆமை உள்ளது. புலி மற்றும் யானை பாதுகாக்கப்படுவதை போல் இந்த ஆமை யும் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதால் பட்டி யல் 1ல் இணைக்கப்பட்டுள்ளது. நகர்புறங்களில்  அதிகம் தென்படாத மற்றும் நன்னீரில் வாழும் இவ்வகை ஆமை சிங்காநல்லூர் குளத்தில் தென் பட்டுள்ளது. இவ்வகை ஆமைகளை பாதுகாக்கவும், குளத்தின் இயற்கை சூழல் அமைப்பை மேம்படுத் தவும் வனத்துறை மற்றும் கோவை மாநகராட்சி முன்வர வேண்டும் என்றார்.