கொரோனா பாதிப்புக்கு உள்ளான புதிய நோயாளிகள் திங்களன்று இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் திங்களன்று நடந்த கொரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
கேரளாவில் புதிய நோயாளிகள் எவ ரும் இல்லாத நிலையில் திங்களன்று 61 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற் போது கேரளத்தில் 34 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சை பெற்று வரு கிறார்கள். தொடர்ச்சியாக இரண்டாவது நாள் புதிய நோயாளிகள் இல்லாதது ஆறுதலளிப்பதாகும்.
திங்களன்று இடுக்கியில் 11, கோழிக் கோடு 4, கொல்லம் 9, கண்ணூர் 19, காசர்கோடு 2, கோட்டயம் 12, மலப் புறம் 2, திருவனந்தபுரம் 2 நபர்கள் குண மடைந்துள்ளனர். இதன் மூலம் திரு வனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புறம் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட் டங்களாக மாறியுள்ளன. இவ்வாறு முதல்வர் கூறினார். செவ்வாயன்று மூன்று புதிய பாதிப்பு கள் ஏற்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 502 அதிகரித்தது. குணமடைந்தோர் யாரும் இல்லாததால் 462 எண்ணிக்கையே தொடர்கிறது. தற்போது 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.