tamilnadu

img

கடலூரை கலக்கிய சிபிஎம் முப்பெரும் விழா

கடலூர், ஆக.24- மதவெறி சக்திகள் நாட்டைப் பிடித்துள்ள இச்சூழலில் சாதிய கருமேகங்கள் தமிழ கத்தையும், கடலூர் மாவட்டத்தையும் சூழ்ந்தி ருக்கக்கூடிய நிலையில் அவர்களுக்கு பிரம்மிப்பூட்டும் வகையிலும், ஏழை, எளிய உழைப்பாளி மக்களுக்கு நாளைய விடியல் நமக்குத்தான் என நம்பிக்கையூட்டும் வகை யிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா வெகுவிமரிசையாக கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட லூர் மாவட்டக்குழு ஏற்பாட்டின்படி “வாழ்வு ரிமை, கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு” தமிழகத்தின் பண்பாட்டுத்தளத்தில் முற் போக்கு கருத்துக்களையும், விதைக்கக் கூடிய சிவப்பு சிந்தனையாளர்களின் கூடா ரமாய் விளங்கும் கலைக்குழுக்களின் கலை இரவும், கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி வர லாற்று நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும் பிரம் மாண்டமான முறையில் முப்பெரும் விழா வாக ஆகஸ்ட் 24 சனிக்கிழமையன்று மாலை துவங்கி விடிய விடிய நடைபெற்றது.

இந்த முப்பெரும் விழாவையொட்டி கட லூர் நகரம் முழுவதும் டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகளும், செங்கொடிகளும் கட்டப்பட்டு நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தை மக்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்த காட்சி அசர வைத்தது. இந்த மாநாட்டிற்கு கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் தலைமையேற்க, மாநிலக்குழு உறுப்பினர் மூசா முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன் அனைவரையும் வர வேற்க, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் ‘வாழும் உரிமை’ தொடர்பான கருத்துரை வழங்கி சிறப்புரை யாற்றினார்.  முன்னதாக அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி ஆகியோர் இன்றைய இந்திய, தமிழக அரசியல் நிலைகளை பற்றி உரையாற்றினர்.