tamilnadu

img

2,215 சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிகமாக நியமனம்

சென்னை, ஏப்.20- தமிழகத்தில் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் தற்காலிகப் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப அரசு முடிவு செய்திருப்பதைத் தொடர்ந்து அது  தொடர்பான அறிவிக்கை வெளி யிடப்பட்டுள்ளது. இது குறித்து, பொது சுகாதாரத் துறை  இயக்குனர் குழந்தைசாமி வெளி யிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:-

தமிழகத்தில், இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு, சேலத்தில் 98, திருவள்ளூ ரில் 80, மதுரையில் 79, திருப்பூர், செங்கல்பட்டில் தலா 73 என தமிழகம் முழுவதும் 2,215 பணியிட ங்கள் காலியாக உள்ளன. தற்போது, அவசரகால நோய்த் தடுப்புப் பணியை கருத்தில் கொண்டு, அந்த இடங்கள் மூன்று மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக நிரப்பப்படுகின்றன.

;