கோவை, ஜூலை 26- பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு வங்கி தேர்வில் 28 மதிப்பெண் நிர்ணயித்ததைக் கண் டித்து கோவையில் ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப் பட்டனர். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங் கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் தேர் வில் தேர்ச்சி பெற்று இறுதிக்கட்ட தேர்வு எழுதுவதற்கு வங்கி நிர்வாகம் கட் ஆப் மதிப்பெண்கள் தீர்மானித்து அறி வித்துள்ளது. இதில், தமிழகத்தில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 61.75, பட்டிய லினத்தவருக்கு 61.25, பழங்குடியினத் தவருக்கு 53.75 என கட் ஆப் மதிப் பெண்கள் தீர்மானித்துள்ள எஸ்பிஐ வங்கி நிர்வாகம், இடஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரி வினருக்கு வெறும் 28.5 கட் ஆப் மதிப் பெண் தீர்மானித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்வை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிக் கையை திரும்பப் பெற வலியுறுத்தி வெள்ளியன்று கோவை எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தை தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட் டிணன் தலைமையில் த.பெ.தி.க., திரா விட தமிழர் கட்சி, ஆதிதமிழர் கட்சி, தமிழ்புலிகள் உள்ளிட்ட 14 அமைப்பு களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட் டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை அங்கு பாதுகாப்பு பணியிடல் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் களை காவல்துறையினர் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்த னர். இப்போராட்டம் காரணமாக அப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பர பரப்பான சூழல் நிலவியது.