tamilnadu

img

இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக்கழகம் சார்பில் சமூக வலைதளப் பிரச்சாரம்

அமெரிக்காவில் நிறவெறிபிடித்த காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட கருப்பினத்தைச் சேர்ந்த  ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கக் கோரியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக்கழகம் சார்பில் ஜூன் 13 சனிக்கிழமையன்று கோரிக்கை அட்டை ஏந்தி சமூக வலைதளப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், ஒருமைப்பாட்டுக்குழு நிர்வாகிகள் ஏ.ஆறுமுகநயினார், ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.