tamilnadu

img

கொரோனா மருத்துவ ஆய்வகம் அமைத்திடுக!

குமரி அரசு மருத்துவமனைக்கு  கூடுதல் மருத்துவ நிபுணர்களை அனுப்புக!

தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை,மார்ச் 29- கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவ நிபுணர்களை அனுப்ப வேண்டும் என்றும் கொரோனா மருத் துவ ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த வர்களுள் கடந்த ஒரு வாரத்தில் மட் டும் 7 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இவர் கள் அனைவரும் கொரோனா வார் டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியைத் தரு கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீன வர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் அவர்களது வீடுகளில் தனி மைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள் ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குமரி மாவட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஒருவேளை வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பார் கள் என்ற ஐயத்தில் இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப் படும் நிலைமை உள்ளது. ஆனால், இங்கு அனுமதிக்கப்பட்டு உள்ள வர்களுடைய இரத்த மாதிரியை சோதிப்பதற்காக சிறப்பு ஆய்வு மையம் எதுவும் இதுவரை அமைக்கப்பட வில்லை. 

இதனால் பாதிக்கப்பட்டவர் களின் இரத்த மாதிரி எடுத்து பல நாட்கள் கடந்த பின்னர்தான் அவர் களுடைய நோயின் தன்மை குறித்த ஆய்வு அறிக்கை வருகிறது. அதற் குள் அந்த நோயாளி இறந்துபோகும் நிலைமை உள்ளது. எனவே, கன்னி யாகுமரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதலான மருத்துவ நிபுணர்களையும், மருந்து களையும், மருத்துவ உபகரணங் களையும், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களையும் அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கி றேன். மிக அவசரத் தேவையாக இந்த மருத்துவக் கல்லூரி மருத்துமனை யில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த மாதிரியை சோதிப்பதற்கான சிறப்பு ஆய்வகத்தை ஏற்படுத்தித் தரு மாறு கேட்டுக் கொள்கிறேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்போரை வெளியே வராதவாறு கண்காணித்து அவர்களுக்குத் தேவையான உணவு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதுடன் மருத்துவக் குழுவையும் அனுப்பி உரிய மருத் துவ சிகிச்சைகளையும் அங்கேயே மேற்கொள்ள வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கான உரிய நடவடிக்கைகள் அனைத்தை யும் மேற்கொள்ள வேண்டும். இவ் வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள் 
தீக்கதிர் இணைய பதிப்பில்