விசாரணை நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஆக. 9- செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பாக லஞ்ச ஊழல் தடுப்புத் துறை மூலம் உரிய விரிவான விசார ணைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக அமைச்சரவையில் தக வல் தொழில் நுட்பத்துறை அமைச்ச ராக இருந்த மணிகண்டனை விடு வித்து, தமிழ்நாடு அரசு கம்பி வடத் தொலைக்காட்சி (அரசு கேபிள் டிவி) நிறுவனத்தில் இதுவரை தொடர்ந்து நடந்து வந்த ஊழல்களை மூடி மறைக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சியில் இறங்கி யிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் மணிகண்டன், “கேபிள் கட்ட ணம் குறைப்பது தொடர்பாக, துறை அமைச்சரான தன்னிடம் முதலமைச் சர் ஆலோசிக்கவில்லை” என்றும், “தமிழ்நாடு அரசு கம்பி வடத் தொலைக் காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், 2 லட்சம் கேபிள் இணைப்புகள் கொண்ட தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்தி வரு கிறார்” என்றும், பரபரப்புக் குற்றச் சாட்டை கூறியிருப்பது, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், “ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்து, லஞ்ச ஊழல் செய்கிறார்கள் ” என்பதற்கு, அந்தக் கூட்டத்திலிருந்தே மேலும் ஒரு ஆதாரமாக வெளிவந்திருக்கிறது. அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் அமைச்சராக இருக்கும் ஒருவரே அதன் தலைவராக இருப்ப வர் மீது இப்படியொரு பகிரங்க குற்றச்சாட்டை வைத்த பிறகும் அந்தக் குற்றச்சாட்டிற்கு உள்ளானவரை பாது காப்பதில் முதலமைச்சர் மிகுந்த ஆர்வ மாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது ஒருபுறமிருக்க, “தரநிலை வரையறை மேலமர்வு பெட்டிகள் (எஸ்.டி. செட்டாப்பாக்ஸ்) தயா ரிக்கும் “வில்லட்” நிறுவனத்தையும் உடுமலை ராதாகிருஷ்ணன் நடத்தி வருகிறார்” என்று இன்னொரு ஆதாரப் பூர்வமான குற்றச்சாட்டையும் துறை அமைச்சராக இருந்தவரே கூறியிருக்கிறார். அரசு கம்பி வடத் தொலைக்காட்சி நிறுவனம் அமைச்ச ராக இருந்த மணிகண்டன் கட்டுப் பாட்டில் இருப்பதால், இந்தப் புகாரில் வலுவான ஆதாரம் இருக்கிறது என் பது தெளிவாகிறது.
குறிப்பாக அரசு தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் உள்ள கேபிள் இணைப்புகளுக்கு, 60 லட்சம் தரநிலை வரையறை மேலமர்வு பெட்டிகளும், (எஸ்.டி. செட்டாப்பாக்ஸ்) 10 லட்சம் உயர் வரையறை மேலமர்வு பெட்டி களும் (எச்.டி. செட்டாப்பாக்ஸ்) வழங்குவதற்கான உலகளாவிய கொள்முதல் ஒப்பந்தம் கையெ ழுத்தாகியுள்ள நிலையில் அமைச்ச ரின் குற்றச்சாட்டு அதிமுக்கியத்துவம் பெறுவதோடு, விசாரணைக்கு உட்ப டுத்தப்பட வேண்டியது என்பதும் உறுதியாகிறது. இந்நிலையில், 2 லட்சம் தனி யார் கேபிள் இணைப்புகளை வைத்துக் கொண்டுள்ள ஒருவரை, அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறு வனத்தின் தலைவராக சில தினங்க ளுக்கு முன்பு அவசர அவசரமாக முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிய மித்தது ஏன்? 70 லட்சம் செட்டாப் பாக்சுகள் வாங்கும் கொள்முதல் விவ காரத்தில் துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் கொடுக் கல்-வாங்கல் சம்பந்தமாக நடை பெற்ற பனிப்போர் என்ன?
இந்த செட்டாப் பாக்சுகளை வழங்க கொடுக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத் திற்கும் அமைச்சரின் குற்றச்சாட்டிற் கும், பிறகு அமைச்சரின் பதவி நீக்கத் திற்கும் என்ன தொடர்பு? இந்த கேள்வி களுக்கு எல்லாம் முதலமைச்சர் பழனி சாமி உடனடியாக வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செட்டாப் பாக்ஸ் தயாரிப்பிலும் ஈடு பட்டு, தனியார் கேபிள் நிறுவனமும் நடத்தி வரும் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணனை அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் பதவியிலி ருந்து உடனடியாக நீக்கி ஏற்கனவே அந்த நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பாக லஞ்ச ஊழல் தடுப்புத்துறை மூலம் உரிய விரிவான விசாரணைக்கு முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார்.