tamilnadu

img

மின்சார ஊழியர்களின் தலைவர் எஸ்.முத்துக்குமாரசாமி காலமானார்

திருநெல்வேலி, மே 3- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் (சிஐடியு) மாநில தலைவர்களில் ஒருவ ராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்ட மூத்த தலைவர் தோழர் எஸ்.முத்துக்குமாரசாமி உடல்நலக்குறைவால் ஞாயிறன்று காலை காலமானார்.

தோழர் எஸ்.முத்துக்குமாரசாமி தூத்துக் குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள புதுக்குடி கிராமத்தை சார்ந்தவர். விடு தலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவருமான டி.ஆர்.சுப்பிரமணியம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார்.

1973ல் மின்வாரியத்தில் கள உதவியாள ராக பணியில் சேர்ந்தார். ஒப்பந்த தொழிலாளி களை நிரந்தரப்படுத்த வேண்டுமென நடை பெற்ற ஏராளமான போராட்டங்களில் கலந்து கொண்டவர். இதன் காரணமாக பல முறை நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளு க்கு ஆளாக்கப்பட்டவர். நெல்லை மாவட்டத்தில் 820 ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர பணி ஆணை பெற முன்நின்று செயல் பட்டவர். 

மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவராகவும், 1987ல் தேர்வு செய் யப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு உறுப்பினராகவும், மின் அரங்க இடைக்கமிட்டி செயலாளராக வும் திறம்பட செயல்பட்டவர். 2005ல் பணியிலி ருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின் மின் வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பிலும், தூத் துக்குடி மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலும் செயலாற்றி வந்தார். 

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறை வால் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பல னின்றி ஞாயிறன்று காலமானார். அவருக்கு வயது 73. இசக்கியம்மாள் என்ற மனைவியும், சுரேஷ், சுந்தர் என இரு மகன்களும், ராக வல்லி என ஒரு மகளும் உள்ளனர். 

மறைந்த தோழர் எஸ்.முத்துக்குமார சாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. அவரது குடும்பத் தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது என, கட்சியின் மாவட்டச் செயலா ளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

தோழர் முத்துக்குமாரசாமி உடலுக்கு சிஐ டியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலை யான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்க ரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டத் தலைவர் பீர்முகம்மது ஷா, செய லாளர் வண்ணமுத்து, பொருளாளர் கந்த சாமி, தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள் காந்தி, நம்பி, மணி மற்றும் பெருமாள், ஜோதி உள்ளிட்டு பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவர், மின் ஊழியர் மத்திய அமைப் பின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவர், மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவராக மின் ஊழியர் மத்திய அமைப் பின் நெல்லை திட்ட செயலாளராக, தலை வராக, சிஐடியு நெல்லை மாவட்ட நிர்வாகி களில் ஒருவராக திறம்பட செயல்பட்டவர் தோழர் முத்துக்குமாரசாமி. மின்சார வாரி யத்தில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழி யர்களை நிரந்தர படுத்துகின்ற போராட்டத் தில் அவரது பங்கு மகத்தானது. தொழிற் சங்க பணிக்காக தனது பதவி உயர்வுகளை இழந்தவர். பலமுறை ஆண்டு உயர்வுகளை இழந்தவர்.

மின்சார தொழிலாளிகளின் பல்வேறு பிரச்சனைகளில் திறம்பட தலையிட்டு வெற்றி கண்டவர் தோழர் முத்துக்குமாரசாமி. அவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரது மறை வுக்கு கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைவர்கள் இரங்கல்

தோழர் முத்துக்குமாரசாமி மறைவுக்கு சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் முன்னாள் தலைவர் எஸ்.பஞ்ச ரத்தினம், கே.விஜயன், எஸ்.எஸ்.சுப்பிரமணி யன், தலைவர் டி.ஜெய்சங்கர், பொதுச் செய லாளர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் எம். வெங்கடேசன் உள் ளிட்டோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.