tamilnadu

img

கொரோனா பரிசோதனையில் குளறுபடி

காஞ்சிபுரம், ஜூலை 4 - கொரோனா பரிசோதனையில் பல்வேறு குளறு படிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், எண்.29/1, பெருமாள் தெரு என்று முகவரியில் வசிப்பவர் ராமநாதன் (52).  இவர் கடந்த 2ந் தேதி காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனையில் கொரோனா பரிசோதனைக்கு சேம்பிள்  கொடுக்க சென்றுள்ளார். அப்போது பரிசோதனை பதிவிற்கான படிவம் இல்லாததால், சிறிது நேரம்  மருத்துவர்கள் காக்க வைத்தனர். பிறகு, படிவத்தை  பூர்த்தி செய்து கொள்வதாக கூறி சேம்பிள் எடுத்துள்  ளார்கள். ஒபி சீட் வாங்கிய  இடத்திலும், வெப்ப நிலை பரிசோதித்த இடத்திலும், டெஸ்ட் எடுத்த இடத்திலும் தனது முகவரியையும், செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜூலை 4 அன்று சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை சுகாதார அதிகாரி  ராமநாதனை தொடர்பு கொண்டு, பரிசோதனை யில் பாசிட்டிவ் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இத னையடுத்து ராமநாதன் மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது, அவர்களும் பாசிட்டிவ்  வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

பட்டியலை சரி பார்த்தபோது, அதில் உள்ள முகவரி, செல்போன்  எண் வேறு ஒருவருடையதாக இருந்துள்ளது. அதன்பிறகு, ராமநாதன் அந்த எண்ணை  தொடர்பு கொண்டபோது, அவர் காஞ்சிபுரம் பிள்ளை யார்பாளையத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரும் ஜூலை 2ந்தேதி மாவட்ட மருத்துவ மனையில் பரிசோதித்துக் கொண்டதாகவும், அன்று  மாலையே வீட்டில் வந்து நகராட்சி சுகாதார ஊழி யர்கள் சுவரொட்டி ஒட்டியதாகவும், பிறகு வந்து கிழித்ததாகவும் தெரிவித்துள்ளார். மறுநாள் மீண்டும்  வந்து சுவரொட்டி ஒட்டினர்கள், பிறகு கிழித்து விட்டார்கள். இப்போது நீங்கள் சொல்வதை கேட்கும் போது, எனக்கு மன உளைச்சலாக உள்ளது.  எனக்கு கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்று அவர் கேட்டுள்ளார். இப்படியாக பல விதங்களிலும் பரிசோதனை யில் குளறுபடி ஏற்பட்டு மாறி மாறி முடிவுகள் அறி விக்கப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்குவது ஏன்? உண்மையில் கொரோனா வந்துள்ளது எனக்கா? சாந்திக்கா? என ராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.