உதகை, ஜூலை 25 – உதகையை அடுத்த சேரம்பாடியில் சிதிலம டைந்து காணப்படும் டேன்டீ தொழிலாளர் குடியிருப்பை செப்பனிட அங்கு வசிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும்பிய மக்க ளுக்காக கடந்த 40 ஆண்டு களுக்கு முன்பு பந்தலூர் அருகே உள்ள சேரப்பாடி பகு தியில் டேன் டீ தொழிற்சாலை அமைக்கப் பட்டது. தற்போது அத்தொழிற்சாலையில் 500-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இப் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்ப தற்காகக் கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தற்போது 40 ஆண்டுகள் கடந்து விட்டதால் மேற்கூரை மற்றும் சுவ களில் விரிசல் ஏற்பட்டு சிதலமடைந்து காணப் படுகிறது. இந்நிலையில், சேரங்கோடு, சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை சந்திப்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் நீல கிரி மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் எம்.எம்.ஹானீபா மாஸ்டர் சென்றார். அப்போது, இவரிடம் அப்பகுதித் தொழிலாளர்கள் குடியி ருப்புகளைப் பராமரிக்கவும், பாதுகாக்கப் பட்ட குடிநீர் கிடைக்கவும், கழிப்பறை வசதி செய்து கொடுக்கவும் டேன் டீ நிர்வாகம் மற் றும் அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.