திருப்பூர், ஆக. 7- திருப்பூர் மாவட்டத்தில், தொழிற்சாலை யில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களது சொந்த மாவட்டத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் அவர்கள் வழி அனுப்பி வைத்தார். திருப்பூர் மாவட்டம், சேவூர் பகுதி தொழிற் சாலையில் 18 வயதிற்கு குறைவான 38 குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களின் விருப்பத்தின் பேரில் வெள்ளியன்று அவர்களது சொந்த மாவட்டத்திற்கு அரசு அலுவலர்களின் கண்காணிப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இம்மாவட்டத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் எவரேனும் பணியில் ஈடுபட்டுள்ளனரா என்பதை ஆய்வு செய்ய தொடர்புடைய அலு வலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த் திய தொழில் நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாகுல்ஹமீது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.