தஞ்சாவூர், ஜன.13- பட்டுக்கோட்டையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தஞ்சை தெற்கு மாவட்ட பொ துக்குழு கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, அவ்வமைப் பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். செயலாளர் வல்லம் பாட்சா, பொருளாளர் எம்.அஸ்ரப் அலி, மாவட்ட துணைச் செய லாளர் எம்.ஐ. அப்துல்லா, மருத்துவ அணி பொறுப்பா ளர் எம்.ஹாஜா அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலா ளர்கள் அன்சாரி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என் ஆா்சி) ஆகியவற்றின் பாதிப்புகள் பற்றி எடுத்து ரைத்தனர். கூட்டத்தில், மத்திய அரசு இச்சட்டங்களை அமல் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரி வித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரி வரும் 25 அன்று காலை 10.30 மணியளவில், ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெறும் பிர மாண்ட பேரணியில், பொது மக்கள் அதிகமானோரை பங்கேற்க வைப்பது, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும், இச்சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெரும் வரை அடுத்தடுத்து போராட்டங்கள் தொட ரும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.