சென்னை, மார்ச் 9- திமுக பொதுச் செயலாள ரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் க. அன்பழகன் மறைவு குறித்து பேரவைத் தலைவர் ப. தனபால் வாசித்த இரங்கல் குறிப்பு வருமாறு:- திராவிட இயக்கத்தின் கொள்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் ஆகியோ ரோடு அரசியலில் பயணித்த வர். பகுத்தறிவு கொள்கைகளை தனது இறுதி மூச்சுவரை கடை பிடித்தவர். சமூக நீதிக்காகவும், மொழி உரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர் பேராசிரி யர் க. அன்பழகன்.
1957 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஒன்பது முறை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர். 1962 முதல் 67 வரை சட்டமன்ற மேலவை உறுப்பின ராகவும், 1967 முதல் 71 வரை திருச்செங்கோடு தொகுதியி லிருந்து மக்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றினார். தமிழக சட்டமன்றத்தில் அவை முன்னவர், மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் மிகச்சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர் க. அன்பழகன். தமிழ்பற்றும், தேசிய உணர் வும் கொண்ட குடும்பத்தில் பிறந்த பேராசிரியர் க.அன்பழ கன் எளிமை, அடக்கம், இறக்கம் என்னும் உயர்ந்த பண்புகளை கொண்டவர். கல்லூரி பேராசி ரியராக பணியை தொடங்கி தமிழர் வாழ்வு, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு என பல்வேறு துறைகளில் ஆழ்ந்து கற்று பல படைப்புகளை வெளியிட்டிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய லாளராக தொடர்ந்து பணியாற்றி யவர். பேரவை விவாதங்களில் சூடுபறக்கும்போது அமைச்ச ராக, அவை முன்னவராக தனது கருத்துக்களை மற்றவர்க ளும் ஏற்கும் வண்ணம் தெரி வித்து பேரவையை அமை திப்படுத்துவார். ஜனநாயக முறைப்படியும், மரபு, விதிப்படி யும் பேரவை நிகழ்ச்சிகள் நடை பெற பெரிதும் உதவி செய்தவர். பேரவையின் பண்பும், சிறப்பும், உயர்வும் எப்போதும் காக்கப் பட வேண்டும் என்ற கொள்கை யில் உறுதி கொண்டவர். பேர வையில் விவாதம் திசைமாறி செல்லும் போது தனது கட்சியை சார்ந்த உறுப்பினர்களை ஒரு நாளும் அனுமதித்தது கிடையாது.