பள்ளிக் கல்வித்துறை யோசனை
சென்னை, செப். 18- அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசுப் பள்ளிகளில் விளையாட்டு, திறன் மேம்பாடு, கற்றலை மேம்படுத்தும் பணிகளில் தனி யார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி முதல் வர்களே முடிவு செய்யலாம் என்றும் அனு மதி அளிக்கும் தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் பாட வேளை, தேர்வு காலம் ஆகியவை பாதிக்காத வகையில் தன்னார் வலர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு களை கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக் கும் விவகாரத்தில் தாமதம் செய்ய வேண் டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.