tamilnadu

img

காவல் அதிகாரி வில்சன் கொலையில் மேலும் 6 பேர் கைது

நாகர்கோவில்,ஜன.19-  களியக்காவிளை காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சா வடியில் பணியில் இருந்த சிறப்பு  உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டு க்கொன்ற வழக்கில் தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய 2  பேரை கர்நாடகா மாநிலம் உடுப்பி யில் காவல்துறையினர் கைது செய்த னர். இவர்கள் மீது  சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு  சட்டமான உபா (UAPA) சட்டப்பிரிவில் வழக்கு  பதிவு செய்துள்ளனர்.  இவர்கள் கொ டுத்த தகவலின் பேரில் இந்த சம்ப வத்தில் மூளையாகச் செயல்ப ட்டதாகக் கூறப்படும் மெகபூப் பாஷா மற்றும் ஜெபியுல்லா, மன்சூர்கான், அஜ்மத்துல்லா ஆகிய  மேலும் 4 பேர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளிகளுக்கு பெங்களூருவில்  அடைக்கலம் கொடுத்ததாக ஹூசைன் ஷெரிப் என்ற நபரை  தமிழக க்யூ பிரிவு போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.  வில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளிகளுக்கு சிம்கார்டு விற்பனை செய்தவர்கள் உள்ளிட்ட 5 பேர் காஞ்சிபுரம், சென்னை, சேலம் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கு ஆதரவா கவும் வில்சன் குறித்து  தவறாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பியவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

;