உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, டிச.3- கொடைக்கானல் கவுஞ்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், செல்வ கணபதி, மல்லரசன், மணி, ரத்தினசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அதில்,” கொடைக்கானலை அடுத்துள்ள மன்ன வனூர் கவுஞ்சியில் ரூ.10 கோடி செல வில் மீன் விதைப் பண்ணை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 86.93 ஹெக்டேர் நிலத்தை மீன்வளத் துறைக்கு வழங்கி திண்டுக்கல் ஆட்சி யர் 8.10.2018-இல் உத்தரவிட்டார்.
கவுஞ்சியில் மீன் விதைப் பண்ணை அமைக்க கோணலாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் போது இப்பகுதி யில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும், விவ சாயம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்கத் தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தனர். இந்த மனு செவ்வாயன்று நீதிபதி கள் சிவஞானம், தாரணி அமர்வில் விசா ரணைக்கு வந்தது.
அப்போது, “அரசுத் தரப்பில் மீன் பண்ணையில் மீன் குஞ்சுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். ஒரு முறை எடுக்கும் தண்ணீரை ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மீன் பண்ணையால் கவுஞ்சியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற் படாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையேற்க மறுத்த நீதிபதி கள், கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க நிரந்தரத் தடை விதித்து உத்தரவிட்டனர். கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க 86.93 ஹெக்டேர் நிலத்தை மீன்வளத்துறைக்கு வழங்கி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்த ரவை ரத்து செய்து, அந்த நிலத்தை மீண்டும் வருவாய்த்துறையிடம் ஒப்ப டைக்க வேண்டும். வருவாய் ஆவ ணங்களில் அந்த நிலம் மீன்வளத் துறைக்கு என மாற்றப்பட்டிருந்தால், அதையும் ரத்து செய்யவும்” உத்தர விட்டனர்.