tamilnadu

img

பெரியாரை சிறுமைப்படுத்துவதா?

ரஜினிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை,ஜன.22- வகுப்புவாத தீய சக்திகளுக்கு ரஜினிகாந்த் இரையாகி விடக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசியலுக்கு வருவதாகக் கூறி, இன்னும் உறுதியாக வராத நிலையில் உள்ள ரஜினிகாந்த், அரசியல் சார்பான கருத்துக்களை தவிர்த்திருக்க வேண்டும். அதற்கு மாறாக தமிழ்ச் சமுதாயத்திற்கு விடியலைப் பெற்றுத்தந்து, சமூக நீதியை வழங்குவதற்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த தந்தை பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் கருத்து கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 1971 இல் நடைபெற்ற சம்பவம் குறித்து கருத்து கூறுகிற நடி கர் ரஜினிகாந்த், துக்ளக் ஆசிரியர் சோ 1992 டிசம்பர் 6 ஆம் நாள்  பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து அடுத்து வெளிவந்த துக்ளக்  வார இதழின் அட்டைப் படத்தில் கடுமையான எதிர்ப்பை தெரி விக்க, கருப்பு வர்ணத்தை பூசி தலையங்கத்தில் ‘அயோத்தில்  நடந்த அயோக்கியத்தனம்” என்று அதன் ஆசிரியர் சோ விமர்  சனம் செய்ததை ஏன் நினைவு கூறவில்லை?

துக்ளக் ஆண்டு விழாவில் கூறிய கருத்தை நியாயப்படுத்து கிற வகையில் கற்பனையாக கூறவில்லை, நடந்ததைத் தான்  சொன்னேன் என்று கூறியதோடு, இந்த சம்பவம் மறைக்கக் கூடிய  சம்பவம் அல்ல, ஆனால் மறக்கக்கூடிய சம்பவம் என்று விளக்க வுரை கூறியிருக்கிறார். 1992, 1996 சம்பவங்களை மறைத்துவிட்டு,  மறக்கக்கூடாத சம்பவமாக 1971 சம்பவத்தைக் கூறியதுஏன்? ரஜினிகாந்த் மீது எங்களுக்கு இன்னும் இருக்கிற நன் மதிப்பின் அடிப்படையில் ஒரு வேண்டுகோள். ‘நடிகர் ரஜினி காந்த் அவர்களே, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்  கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால்,  வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவு செய்து இரையாகி விடாதீர்கள்” என்று அன்போடு உங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

;