tamilnadu

img

மக்கள் தலைவர் கோ.வீரய்யன் 2-ம் ஆண்டு நினைவுதினம்... சித்தாடி கிராமத்தில் சிபிஎம், வி.ச, வி.தொ.ச தலைவர்கள் அஞ்சலி

குடவாசல்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்முதுபெரும் தலைவர் தோழர் கோ.வீரய்யனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சித்தாடிகிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள சித்தாடி கிராமத்தில் மகத்தான மக்கள் தலைவர் கோ.வீரய்யனின் இரண்டாம் ஆண்டுநினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. குடவாசல் ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி  தலைமை வகித்தார். தமிழ்நாடுவிவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் ஆகியோர் தோழர் கோ.வீரய்யன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி புகழுரை ஆற்றினர்.

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்கமாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வி.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், தலைவர் எஸ்.தம்புசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், விவசாயத் தொழிலாளர் சங்கமாவட்டச் செயலாளர் ஆர்.குமாரராஜா, தலைவர் எம்.கலைமணி மற்றும்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், சிபிஎம் மாவட்ட கவுன்சிலர்ஜெ.முகமதுஉதுமான், ஒன்றியச் செயலாளர்கள், கிளை உறுப்பினர்கள் மற்றும் சிபிஎம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டக்குழு தலைவர்கள், அனைத்து வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.