தூத்துக்குடி,மார்ச் 26- தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக, பொதுமக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகே யுள்ள காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் புதனன்று காய்கறி கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமானதால் மார்க்கெட் மூடப்பட்டது. இந்நிலையில் வியாழனன்று அதிகாலை 4 மணிக்கு மார்க்கெட்டில் விற்பனை தொடங்கியது. இங்கு மொத்தமாக மக்கள் கூடுவதை தவிர்க்க ஒவ்வொரு நபருக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் வட்டமிடப்பட்டு இருந்தது.
பொதுமக்கள் வட்டத்துக்குள் நின்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் மார்க்கெட்டுக்குள் குறிப்பிட்ட நேரமே இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். முன்னதாக மார்க்கெட்டில் காய்கறிகள், பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு சோப்பு ஆயில் கொடுத்து கைகளை கழுவும்படி மாநகராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தினர்.