tamilnadu

img

நெல்லை கண்ணன் சேலம் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி, ஜன.2- பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை விமர்சித்துப் பேசியதாக   கைது செய்யப்பட்ட ‘தமிழ்க் கடல்’ நெல்லை கண்ணன் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சேலம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். மேலப்பாளையத்தில் கடந்த 29ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து குடியுரிமை பாது காப்பு மாநாடு நடைபெற்றது. அதில் நெல்லை கண்ணன் பேசினார். அந்த பேச்சில், பிரதமர்  மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்‌ ஷா  ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்த தாகக் கூறி, நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், நெல்லை கண்ணன் மீது மேலப்பாளை யம் போலீசார் 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த நிலையில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனி யார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை, போலீசார் அங்கு சென்று கைது செய்தனர். இதுபற்றி தகவல்அறிந்து மேலப்பாளையம் போலீசார் பெரம்பலூ ருக்கு சென்றனர். அவர்களிடம் நெல்லை கண்ணனை பெரம்பலூர் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை மேலப் பாளையம் போலீசார் நெல்லைக்கு அழைத்து  வந்தனர். வியாழக்கிழமை நெல்லை அரசு மருத்துவமனைக்கு மிகப்பெரிய கிரிமினல் குற்றவாளியைப் போல பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். அங்கு நெல்லை கண்ணனின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது.  மருத்துவ பரிசோதனை முடிந்தபிறகு நெல்லை கண்ணனை, நெல்லை குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். அவரை 13 ஆம் தேதி வரை  நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார், தொடர்ந்து நெல்லை கண்ணன் சேலம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

;