மத்திய அரசின் வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் நிர்மா சீதாராமன், பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்த சில நிமிடங்களிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கிளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சார்பில் பழனி, அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கம் சார்பில் நாராயணன், முகவர்கள் சங்கம் சார்பில் மகாராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.