சென்னை, நவ. 8- சென்னை ஆழ்வார்பேட்டை யில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் அமைக் கப்பட்டுள்ள இயக்குநர் கே. பாலச்சந்தர் சிலையை, ரஜினியும் கமலும் இணைந்து திறந்து வைத்தனர். சென்னை ஆழ்வார் பேட்டை யில், ராஜ்கமல் இன்டர்நேஷனல் திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டி டத்தின் முகப்பு பகுதியில் இயக்கு நர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை அமைக்கப்பட் டுள்ளது. 60 கிலோ எடை, 2 அடி உயரம் கொண்ட இந்த வெண்கல சிலையை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து திறத்து வைத்தனர். கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், சந்தான பாரதி, நடிகர்கள் நாசர், ரமேஷ் அர விந்த், ஸ்ருதிஹாசன், அக்சரா ஹாசன் மற்றும் பாலச்சந்தர் குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, “அரசியலுக்கு வந்த பிறகும் தாய்வீடான சினிமாவை கமல் மறக்கமாட்டார் என்பது நிரூபண மாகியுள்ளது” என்றார். அபூர்வ சகோ தரர்கள், தேவர் மகன், ஹே ராம் உள்ளிட்ட கமல் படங்களை புகழ்ந்து பேசினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரை யாற்றிய கமல்ஹாசன், “சினிமா அலுவலகத்திற்கு தாம் வரும் போது பாலச்சந்தர் தன்னை கண்காணிப் பது போல் இருக்கட்டும் என்பதற் காகவே அவருக்கு சிலை வைத்தி ருப்பதாக குறிப்பிட்டார். ராஜ்கமல் நிறுவனத்தின் 50வது படம், மிக பிரம்மாண்ட படம் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.