tamilnadu

img

ஒரே தேசம், ஒரே மொழி என்பது பாசிசத்தின் தொடக்கம்

முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேச்சு

மதுரை, செப்.22- ஒரே தேசம், ஒரே நாடு, ஒரே மொழி என்பது பாசிசத்தின் தொடக்கம் என் பதைப் புரிந்து கொண்டு இதை எதிர்த்துப்போராட ஆசிரியர்களும், மக்க ளும் தயாராக வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு கூறினார். அகில இந்தியப் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்ட மைப்பும், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பும் இணைந்து தேசியக் கல்விக்கொள்கை-2019-ஐ முன் வைத்து மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரில் கருத்தரங்கம் ஒன்றை ஞாயிறன்று நடத்தின. இதில் கலந்து கொண்டு முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசியதாவது:-

தேசிய கல்விக்கொள்கையால் குழந்தைகள், மாணவர்கள், பெற் றோர்கள், ஆசிரியர்களுக்கு என் னென்ன பாதிப்புகள் ஏற்படும் எனப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், காஷ்மீர் மாநிலத்தில் கல்வி இருளில் மூழ்கியுள்ளது. அங்கு பள்ளிகள், கல்லூரிகள் நடைபெறவில்லை. வலை தளம், தொலைபேசி சேவை முடக்கப்பட் டுள்ளது. ஒட்டுமொத்த காஷ்மீரும் இரு ளில் உள்ளது. 1975-ஆம் ஆண்டுகளில் மாநில அரசின் பொதுப்பபட்டியலில் இருந்த கல்வி மத்திய அரசின் ஒத்திசைவுப் பட்டி யலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பெரும்பான்மையான மாநில அரசுகள் தனியார்மயக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதால் இது தொடர்கிறது. கல்வியில் மாணவர்களை மேம்படுத்தும், ஊக்கப்படுத்தும் ‘சாவி’ ஆசிரியர்களிடமே உள்ளது. அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.  கல்வியை அரசு முழுமையாக இல வசமாகக் கொடுக்க இயலாது. இதில் தனியார் தேவை. அவர்களது முத லீட்டிற்கு நியாயமான முறையில் லாபம் சம்பாதிக்க உரிமையுண்டு என நீதி மன்றம் 1994-ஆம் ஆண்டு தீர்ப்பளித் துள்ளது. தனியார்மயத்தை இதன் மூலம் நியாயப்படுத்தியுள்ளது.

கல்வியில் தனது பொறுப்பை கை கழுவ மத்திய அரசு நினைக்கிறது. ஒரே தேசம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற பாசிசத்தின் அடையாளத்தின் தொடக் கமே இந்த வரைவுக்கல்விக்கொள்கை என்பதைப் புரிந்துகொண்டு இதற்கெதி ராகப் போராட வேண்டுமென்றார்.

மாநில உரிமை

பறிபோகும் மாநில உரிமைகள் என்ற தலைப்பில் திமுக அமைப்புச் செய லாளரும் மாநிலங்களவை உறுப்பின ருமான டி.கே.எஸ்.இளங்கோவன் பேசி யதாவது: தேர்வு என்ற பெயரில் பள்ளிகளிலி ருந்து ஏராளமானோரை வெளியேற்றும் முயற்சி தான் தேசிய வரைவு கல்விக் கொள்கையின் நோக்கம். 1976-ஆம் ஆண்டு வரை கல்வி மாநிலங்களின் பொதுப்பட்டியலில் இருந்தது. மத்தியஅர சின் பட்டியலுக்குச் சென்ற பின் அது வணிகமயமாகிவிட்டது. தமிழக கல்வித் துறையில் மத்திய அரசின் தலையீடு அதி கரித்துள்ளது. மதிப்பெண் பெறும் இயந்தி ரமாக மாணவர்கள் மாற்றப்பட்டுள்ள னர். கல்வி அறிவை வளர்ப்பதற்காகத் தானே தவிர அது விற்பனைக்கான பொருளல்ல. அடிப்படைக்கல்வி தர மானதாக, அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். கல்வியை முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒப்ப டைக்க வேண்டும். தேசிய வரைவுக் கொள்கை அமலானால் காமராஜர் பெயரில் கொண்டாடப்படும் கல்வி வளர்ச்சி நாளே இல்லாமல் போகும்.

எல்லோரும் படிக்க வேண்டும் என்பதை மாற்றி எல்லோரும் படித்து விடக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதுதான் தேசியவரைவுக் கொள்கை இதை நிராகரிக்க வேண்டும். இதை எதிர்த்துப் போராட வேண்டும் என்றார்.

சமூக நீதி புறக்கணிப்பு

மூகநீதி புறக்கணிக்கப்பட்டுவிட்டது என முன்னாள் துணைவேந்தர் வி. வசந்திதேவி பேசினார். கருத்தரங்கில் அவர் பேசியதாவது:- ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்விகற்று மேல்நிலைக்கு வந்துவிடக் கூடாது என ஆதிக்க சக்தி கள் விரும்பின. இதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் தொடர்ந்து நடத்தப் பட்டதன் விளைவாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி கிடைத்தது. தற்போது தேசிய வரைவுக் கல்விக் கொள்கை என்றபெயரில் ஆதிக்க சக்திகள் மீண்டும் தலை தூக்கத் திட்ட மிடுகின்றன. இந்தக் கொள்கையில் வார்த்தை ஜாலங்கள் ஏராளம் உள்ளது. இதில் மறைமுகமாக திணிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் எண்ணங்களை, கொள்கைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டங்கள், கலந்து ரையாடல்கள் நடத்தியதாகக் கூறு கிறார்கள். பெங்களூர், மும்பை, தில்லி ஆகிய இடங்களில் கூட்டங்கள் நடத்தி யுள்ளார்கள். ஆனால், ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. ஏபிவிபி என்ற மாணவர் அமைப்பிடம் மட்டும் கருத்துக்கேட்டுள்ளனர். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் போராடிவரும் இந்திய மாணவர் சங்கம் போன்ற அமைப்பிடம் கருத்து கேட்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர் புதிய கல்விக்கொள்கை யை சுருக்கமாக ‘சிசிசி’ என வர்ணித் துள்ளார், அதாவது ‘Centralization, Commercialisation. Communilisation’. இது தான் யதார்த்தம். மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தமி ழகத்திலும் நடைமுறையில் உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் அவ்வளவு எளிதில் வெற்றிபெற்றுவிட முடியாது.

தற்போது 24 சதவீதமாக உள்ள உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை (GER) 2025-ஆம் ஆண்டுக்குள் 50 சத வீதமாக உயர்த்த இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. 850 பல்கலைக்கழ கங்கள், 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகள் 1,500 உயர் கல்வி நிறு வனங்களாக குறைக்கப்படும். தனியார் உயர் கல்வி நிறுவனங்க ளில் இட ஒதுக்கீடு கிடையாது. அதே போல் அரசு கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வலியுறுத்தப்படவில்லை. 200 அந்நியப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவிற்குள் வரவுள்ளது. உள்ளூர் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் அனைத்து சலுகைகளும் அவர் களுக்கு உண்டு. புதிய கல்விக் கொள்கையில் ‘உரிமை’ என்ற சொல்லே இல்லை. இத னால் பேராசிரியர்களுக்கு அபாயம் உள்ளது. மயக்கும் வார்த்தை ஜாலங் கள், கார்ப்பரேட்டுகளிடம் கல்வியை ஒப்படைப்பது, கல்வியை வணிகமய மாக்குவது, சனாதன கொள்ளைகளை புகுத்துவது, வேதகால கல்வி, புராணக் கதைகளை புகுத்துவது, சமஸ்கிரு தத்தை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகள் தொடரும்.

குழந்தைகளை  கைகழுவிய அரசு

குழந்தைகளைக் கை கழுவிவிடும் கிரிமினல் குற்றத்தை மத்திய அரசு தேசிய வரைவுக்கொள்கையின் மூலம் செய்துள்ளது என கல்வியாளர் ஆயிஷா நடராஜன் கூறினார். கருத்தரங்கில் அவர் பேசியதாவது:- தேசிய வரைவுக் கல்விக் கொள்கை என்ற பெயரில் ‘காவி கார்ப்பரேட்’ மய மாக்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விளையாடிக் கொண்டி ருக்கிறார்கள். தமிழகத்தில் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளையாடிக் கொண்டிருக்கிறார். மேல்நிலைக்கல்வி முதலா மாண்டில் பொதுத்தேர்வு முறையை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் விளைவு என்னவென்றால் மேல்நிலைக் கல்வி இரண்டாமாண்டில் சுமார் ஒரு லட்சத்து 47 ஆயிரம் மாண வர்களைக் காணவில்லை. கேட்டால் பாலிடெக்னிக் போன்ற தொழில் சார் படிப்புகளுக்கு சென்றுவிட்டதாகக் கூறு கின்றனர். அவர்களோ தொழில்சார் படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை வருடாவருடம் 25 பேர் வரை குறைகிறது என்கின்றனர். பாடச்சுமையால் பல மாணவர்கள் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர் என்றார்.

கார்ப்பரேட் மயம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மதுக்கூர் இராம லிங்கம் பேசுகையில், தேசிய வரைவுக் கல்விக்கொள்கை குறித்து, மாண வர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் கருத்தை கேட்கவில்லை. நாடாளு மன்றத்தில் விவாதிக்கவில்லை. கஸ்தூரி ரங்கன் அறிக்கை ஏற்கக் கூடியதா? ஏற்கக் கூடாததா? என்பது பற்றியும் சிந்திக்கவில்லை. ஆனால் நடை முறைப்படுத்துகிறார்கள். பள்ளிகளிலி ருந்து ஏழை-எளிய மாணவர்களை எப்படி வெளியேற்றுவது என்பது குறித்தே யோசிக்கிறார்கள். மத்திய அரசின் கொள்கையை அப்படியே பின்பற்றும் தமிழக அரசும் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் என கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைப்ப தாக அறிவித்துள்ளார். மூன்று ஆண்டு கள் கழித்து அவர்களது அரசு இருக்குமா என்பது சந்தேகமே?

புதிய கல்விக் கொள்கையால் மாண வர்களுக்கு மட்டும் ஆபத்து அல்ல. ஆசிரியர்களுக்கும் உள்ளது. அவர்கள் முறைசாராத் தொழிலாளர்களாக மாறிவிடும் அபாயம் உள்ளது. திறமை, தரம் குறித்து மாணவர்களிடம் பேசுவது வன்முறைக்குச் சமமானது. சாதியின் பெயரால் மறுக்கப்பட்டு வந்த கல்வி இனி, பணத்தால் மறுக்கப்படும். 2,300 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் எழுத்தறிவில் திறமையான வர்களாக இருந்தார்கள் என்பதற்கு கீழடி அகழாய்வே சாட்சி. அங்கு கண்டெ டுக்கப்பட்ட ஓடுகளில் கோதை என்பன உள்ளிட்ட பெண்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் பத்து பல்க லைக்கழகங்கள் உருவாகப்போவதாக வும் அதில் ஒன்று ஜியோ எனவும் அரசு கூறியுள்ளது. இதற்கு 10 ஆயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இனி மேல் வரப்போவதாகக் கூறப்படும் பல்க லை.க்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள் ளது.

புதிய கல்விக்கொள்கையால் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பயிற்சி நிலையங்களில் என்ன நடக்கும் என்பதற்கு நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த மாணவரே சாட்சி. கல்வியை கார்ப்பரேட் மயமாக்கும் இந்தக் கொள்கை கல்விக்கு எதிரானது என்றார். கருத்தரங்கிற்கு அகில இந்திய பல்க லைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசியச் செயலாளர் சுப்பாராஜ் தலைமை வகித்தார். இடை நிலை பட்டதாரி ஆசிரி யர் சங்க நிர்வாகி மாயவன் வரவேற்பு ரையாற்றினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் நிகழ்வை ஒருங்கிணைத்தார். மூட்டா பொதுச்செய லாளர் எம்.நாகராஜன் தீர்மானங்களை முன்மொழிந்தார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி கே.பி.ஒ.சுரேஷ் நன்றி கூறினார்.