மதுரை, மார்ச் 23- மதுரை அரசு மருத்துவமனையில் சளி, காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சிவகங்கை மாவட்டத் தைச் சேர்ந்த இருவர், மதுரை அண்ணாநகர் பகுதி யைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் நான்கு பேரின் ரத்த மாதிரிகள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன. கொரோனா வைரஸ் பரவி வரும் அசாதாரண சூழ்நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்க மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம், மதுரை மாவட்ட நிர்வாகம் குறைந்தபட்சம் ஒரு ஆறுதலான தகவலைக் கூட மக்களுக்கு தெரிவிப்பதில்லை. அது தொடர்பான செய்திகளை பத்திரிகைகளுக்கு வழங்குவதில்லை. பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண். பத்திரிகைகள் மூலம் உண்மைச் செய்திகளையும், அரசின் நடவடிக்கைகளையும் வெளியிட்டு கொரோனா பீதியிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும். இதைச் செய்வதற்கு மருத்துவமனை, மதுரை மாவட்ட நிர்வாகம் இரண்டும் தயங்குவது ஏனென்று தெரியவில்லை.