tamilnadu

img

வேலூர் சிறையில் நளினி-முருகன் உண்ணாநிலை நீடிப்பு

வேலூர்,நவ.2- வேலூர் சிறையில் முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டு வருவ தால் அவர்களது உடல் நிலை குறித்து மருத்து வர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முரு கன், பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி ஆகிய இருவரும் தொடர்ந்து உண்ணா நிலையை மேற்கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது  மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்  பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கிய தால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வா கம் ரத்து செய்தது. இந்நிலையில், சிறையிலுள்ள முருகனை சிறை  நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26 ஆம் தேதி முதல் தொடர்ந்து உண்ணா நிலையை கடைபிடித்து வருகிறார். 8வது நாளாக நளினி தனது போராட்டத்தை தொடர்ந்தார். அதேபோல் தன்னை தனி அறை யில் அடைத்து கொடுமைப்படுத் துவதாக கூறி முரு கனும் 16-வது நாளாக உண்ணாநிலை போராட் டத்தை மேற்கொண்டு வருகிறார். இருவரிடமும் சிறை  அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்  டத்தை மறுத்து விட்டனர். முருகன்- நளினி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் உடல் நிலை  குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.