tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: வாக்காளர்களுக்கு முத்தரசன் நன்றி

சென்னை,ஜன.4- உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த அனை வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்தி ருக்கிறது.  இதுகுறித்து அக் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா. முத்துரசன் அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- அதிமுக ஆட்சியில் மூன்றாண்டுகளாக முடக்கிப் போடப்பட்ட உள்ளாட்சிச் ஜனநாய கத்தை மீட்டெடுக்க எதிர்கட்சிகள் நடத்திய நீண்ட போராட்டத்தாலும்,திமுக சட்டப் போராட்டத்தாலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அரசின்  ஒரு பிரிவு போல் செயல்படுவது நீதிமன்றத்தில் வெளிப்பட்டது. தொடர்ந்து ஆளும் கட்சியின் அழுத்தங்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் ஆளாகியதை தேர்தல் நடைமுறைகளும் வெளிப்ப டுத்தியுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆளும் கட்சியினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியின் விருப்பம் போல் சில இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன.  ஒரு பொறுப்புக்கு போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்றதாக சான்று வழங்கியிருப்பது, எதிர்கட்சியினரின் ‘மறு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கை பல்வேறு இடங்களில்  நிராகரிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு தடைகள், இடையூறுகளை தாண்டி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து மகத்தான வெற்றி பெறச்  செய்த வாக்காளப் பெருமக்களுக்கும் ஆளும் கட்சி யின் சட்ட அத்துமீறல்கள், அராஜக நடவடிக்கை களை தடுத்து, விழிப்புடனும், முனைப்போடும் பணி யாற்றிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி  கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகி களுக்கும், ஆயிரமாயிரம் தொண்டர்களுக்கும் இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.

;