tamilnadu

img

ஊருக்குத்தான் உபதேசமா?

முதல்வருக்கு முத்தரசன் கேள்வி

சென்னை, ஏப். 17- முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை  (ஏப்.17) சேலம் சென்று மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்தி, பின்னர் செய்தி யாளர்களை சந்தித்துள்ளார். இது அரசின் ஊரடங்கு சட்டத்தை யும், கோவிட் 19 நோய் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளையும், விதி முறைகளையும் மீறிய செயல் அல்லவா?  என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் இரா முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 15.04.2020 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த எதிர் கட்சி கள் கூட்டத்தை நடத்தக் கூடாது  என்று அறிவுறுத்தி காவல் துறை சேலத்தில்  கூடிய பெரிய  கூட்டத்தை ஏன் தடுக்கவில்லை.? முதலமைச்சர் என்பவர் அரசி யல் அமைப்பு சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களுக்கும் மேலானவரா? அவர் என்ன தனது பராக்கிரமச் செயலால் படை நடத்தி வென்று, அதிகாரத்தில் உள்ள சர்வாதிகாரியா?

அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் விசாலமான கலைஞர்  அரங்கில் அரசியல் கட்சி தலை வர்கள் 11 பேர் கூடுவதால்  கோவிட் 19 நோய் தொற்று பரவி விடும் என பரபரப்பாக்கி தடை செய்து, காணொலி மாநாடு வழி யாக கூட்டம் நடத்தச் சொன்ன ‘யோக்கியர்’கள் எங்கே போனார்கள்?  

முந்தைய நாள் (ஏப்.16) தலைமை செயலகத்தில் அமர்ந்து  காணொலி மாநாடு வழியாக  நீண்ட நேரம் மாவட்ட ஆட்சியர்க ளோடு கலந்தாலொசனை நடத்திய முதலமைச்சர் அடுத்த நாளில் சேலத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள அலுவர்களை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டிய அளவிற்கு என்ன தேசிய நெருக்கடி ஏற்பட்டது ?

ஜனநாயக அரசியல மைப்பில் எதிர் கட்சிகளின்  செயல்பாடுகளை ஒடுக்கி வரு வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.  மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் நடத்தும் மாவட்ட  அளவிலான ஆய்வுக் கூட்டங்க ளுக்கு, எதிர் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற  உறுப்பினர்கள் அழைக்கப்படு வதில்லை என்பது முதலமைச்ச ருக்கு தெரிந்தே நடக்கும் உரிமை  மீறல் செயலாகும்.

ஆளும் கட்சி என்ற தோர ணையில், அரசின் ஆய்வுக் கூட்டங்களை அஇஅதிமுக அரசி யல் பரப்புரை மேடை ஆக்கி வரு வதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது .

வாயில் நுரை தள்ள ஊருக்கு  உபதேசம் செய்து வரும் முதல மைச்சர் எடப்பாடி கே.பழனி சாமி, அவைகளை முதலில் அவ ரது செயலில், கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.