tamilnadu

img

ஒலிம்பிக் கமிட்டியால் வீரர்களுக்கு மன உளைச்சல்

விளையாட்டு உலகில் ஜாம்பவானாக உள்ள அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் நடைபெறும் சாதாரண மற்றும் சர்வதேச தொடர்களை ரத்து செய்து கொரோனவை விரட்டும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளன.  ஆனால் ஜப்பானில் வரும் ஜூலை மாதம் நடைபெறும்  டோக்கியோ ஒலிம்பிக் தொடர் பற்றி இறுதி முடிவு எடுக்காமல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பொறுப்பின்றி செயல்பட்டு வருகிறது. ஜப்பான் அரசும் 56 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள ஒலிம்பிக்கை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் கொரோனாவை விரட்ட தீவிர முனைப்பில் செயலாற்றி வருகிறது. 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி ஆகியவற்றின்  தொலைநோக்கு அற்ற செயலால் வீரர்- வீராங்கனைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.   தொடர்ந்து பயிற்சி பெறுவதா? அல்லது கொரோனா தனது ஆட்டத்தை முடித்த பின் பயிற்சி மேற்கொள்வதா? என்பது தான் வீரர்- வீராங்கனைகளின் ஒரே முடிவு. அந்த முடிவை எடுக்க ஒலிம்பிக் சம்மேளனத்தின் அறிவிப்பை பொறுத்துத் தான் செயல்படுத்த முடியும். வீரர் - வீராங்கனைகளின் எதிர்கால வாழ்வை மனதில் வைத்து ஒலிம்பிக் மற்றும் ஜப்பான் கமிட்டிகள் விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என்பது ஒட்டுமொத்த விளையாட்டு உலகின் எதிர்பார்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.