tamilnadu

img

நடமாடும் ரத்த - சளி மாதிரி சேகரிப்பு மையம்

சென்னை, ஏப்.19 - சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக திங்களன்று  (ஏப். 20) முதல்  நடமாடும் ரத்த மற்றும் சளி மாதிரி சேகரிப்பு மையம்  செயல்பட உள்ளது. அதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மாதிரி கள் சேகரிக்கப்பட வுள்ளன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 3 வாகனங்கள் மூலம் ரத்த மற்றும்  சளி மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளன. சென்னை யில் ஏற்கனவே 26 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும்  14 மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முற்றிலும் முடக்கப்பட்ட பகுதி கள், முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்காக நடமாடும் மாதிரி சேகரிப்பு மையம் செயல்படவுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.