tamilnadu

img

மதுரையில் இன்று சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில மாநாடு

மதுரை, மார்ச் 13- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மூன்றாவது மாநில மாநாடு மதுரை கே.கே.நகரிலுள்ள  வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹாலில் சனிக்கிழமை நடைபெறுகிறது. மாநிலத் தலைவர்  எஸ். நூர்முஹமது தலைமை வகிக்கிறார், மாநிலத் துணைத் தலைவர்  என். நன்மாறன் வரவேற்றுப் பேசுகிறார். மதுரை உயர் மறை மாவட்ட பேராயர், தமிழக ஆயர் பேரவை தலைவர் அந்தோணி  பாப்புசாமி மாநாட்டை துவக்கி வைக்கிறார். பொதுச் செயலாளர் ப.மாரிமுத்து அறிக்கை யையும் பொருளாளர் எம்.முகமது உசேன் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பிக்கின்றனர். வரவேற்புக் குழுத் தலைவரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன், கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் கே.நவாஷ் கனி, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன், லட்சுமணன், ஹாஜி மூசா, லீமாறோஸ், தாமஸ் சேவியர், வ.கல்யாணசுந்தரம், ஏ. கே. தர்ஷிரீப் ஜஹான், வரவேற்புக்குழுப் பொருளாளர் எம். ஜான்சன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். வரவேற்புக் குழுச் செயலாளர் கே. அலாவுதீன் நன்றி கூறுகிறார்.

;