tamilnadu

img

மழை வேண்டி அமைச்சர் யாகம் மாடு உதைத்ததில் வாலிபர் காயம்

கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அதிமுக தலைமை மழைக்காக யாகம் நடத்த உத்தரவிட்டு, அதற்கிணங்க கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் வருண ஜபம் மற்றும் யாகம் நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த வருண ஜபம் மற்றும் யாகத்தில், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கோ பூஜையின் போது, பசுமாடு மிரண்டு உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் விக்னேஷ் என்ற வாலிபர் காயம் அடைந்தார். இதனால் பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உட்பட அனைவரும் சிதறி ஓடினர்.இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக பிரமுகர்கள் அஸ்வ, கஜ பூஜைகளில் கலந்து கொண்டனர்.

;