tamilnadu

img

உண்மையை உடைத்த அமைச்சர்!

சென்னை, ஜூலை 19- சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டியதன் அவசி யம் குறித்து திமுக உறுப்பினர் உ. மதிவாணன் அமைச்சரின் கவ னத்துக் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்த வரு வாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “அந்த மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் மிக  குறைவாகவே உள்ளது. கோவில் நிலத்தின் விலை அதிகமாக உள்ள தால் அரசின் பிற துறைகளுக்கு நில மாற்றம் செய்து கொடுக்கவும் முயற்சி  கள் நடந்து வருகிறது” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய  அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “அந்த  மாவட்டத்தில் கோவில் நிலம்தான்  அதிகம். குறிப்பாக எனது தொகுதி யான வேதாரணயத்தில் 26 ஆயிரம் ஏக்கர் நிலம் கோவில்களுக்கு சொந்தமானதாகும்.  75 விழுக்காடு மக்கள் கோவில் நிலத்தில்தான் வசித்து வருகிறார்கள். ஆனால், கஜா புயல் பாதிப்புக்கு பிறகு மிகப்  பெரிய பிரச்சனையே மின் இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்க மின்வாரியம் மறுப்  பதுதான். காரணம், மக்கள் வசிக்  கும் குடியிருப்புகள் பெரும்பான் மையான பகுதி இந்து சமய அற நிலையத் துறைக்கு சொந்தமான தாகும். அதேபோல், பழுதடைந்த  குடிசைகளை இடித்து மீண்டும்  கட்டுவதற்கும் அனுமதிக்க வில்லை. ஒன்று தடையில்லா சான்று வழங்க வேண்டும். அப்படி யில்லை என்றால் தடையில்லா சான்று கேட்காமல் மின் இணைப்பு கொடுக்கவும் வீடுகளை  கட்டிக்கொள்ளவும் மின்துறை அமைச்சரும், இந்துசமய அறநிலை யத் துறை அமைச்சரும் நடவடிக்கை  எடுக்க வேண்டும்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்  கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “அமைச்சரின் கோரிக்கை நியாய மானதுதான். இது விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து அவர் விவாதம் செய்தி ருக்கலாம்” என்றார். சிறிது நேரத்திற்கு பிறகு விளக் கம் அளித்த வருவாய்த்துறை அமைச்சர்,“கோவில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க வழி வகை செய்து நிரந்தர தீர்வு காண்ப தற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில்  பேசப்பட்டதைதான் அமைச்சர் (மணியன்) தெரிவித்தார். நில பரி வர்த்தனை செய்யவும், தடை யில்லா சான்று வழங்கவும் நடவ டிக்கை எடுத்துள்ளோம்” என்று சமாளித்தார்.