tamilnadu

img

பரிசீலனையில் காவல் ஆணையம்

சென்னை, ஜூலை 19- 4வது காவல் ஆணையம் அமைக்க  வலியுறுத்தி காவல்துறை இயக்குநர் அனுப்பிய கருத்துரு அரசின் பரிசீலனை யில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். பேரவையில் வெள்ளியன்று (ஜூலை 19) காவல்துறை மானியத்தின் மீதான விவா தத்தின்போது திமுக உறுப்பினர் பொன்  முடி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கை யில் மேற்கண்டவாறு முதல்வர் கூறினார். இதனைத்தொடர்ந்து அறிவிப்புக் களை வெளியிட்ட அவர், தஞ்சை சோழ புரம், நாமக்கல் செங்கரை, மதுரை திருப்  பாலை, மாட்டுத்தாவணி, தருமபுரி பாலக்  கோட்டில் அனைத்து மகளிர் காவல்நிலை யம் என 5 காவல் நிலையங்கள் உருவாக்கப்  படும். திருப்பூர் மாவட்டத்தில் சைபர் கிரைம்  பிரிவு தொடங்கப்படும் என்றார். கோவை பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூர், ஈரோடு நம்பியூர், நாமக்  கல் வெப்படை, சென்னை அண்ணாநகர், காஞ்சிபுரம் மாகாபலிபுரம், மேடவாக்கம், விருதுநகர் காரியாப்பட்டி, நெல்லை கங்கைகொண்டான், திருச்சி சமயபுரம், நாகை மணல்மேடு, விழுப்புரம் திருநாவ லூர், மதுரை வாடிப்பட்டி, சேலம் காடை யாம்பட்டி ஆகிய 14 இடங்களில் தீய ணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும்  முதலமைச்சர் கூறினார்.