சென்னை, பிப். 4- எல்ஐசி பங்கு விற்பனையை எதிர்த்து செவ்வாயன்று (பிப்.4) நாடு முழுவதும் ஒரு மணி நேர வெளி நடப்பு வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இந்தப்போராட்டம் 100 விழுக்காடு வெற்றிகரமாக நடந்தது. மத்திய அரசு பட்ஜெட்டில் எல்ஐசி பங்குகளை விற்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் ஊழியர்களும், முகவர்களும் போராடி வருகின்றனர். பொதுமக்களும் அரசின் முடிவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஒரு மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத் திற்கு அறைகூவல் விடுத்தன. அதனை யேற்று அனைத்து தொழிற்சங் கங்களும் இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்டன. சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி தென்மண்டல அலுவ லகத்திலிருந்து ஊழியர்கள் வெளி நடப்பு வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடியது. இதன் தொடர்ச்சி யாக சென்னை காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் (ஏஐஐஇஏ) சென்னை பகுதி-1ன் தலைவர் ஜெயராமன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனிடையே செய்தியாளர்களி டம் பேசிய ஏஐஐஇஏ சென்னை பகுதி-1ன் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், “வேலைநிறுத்தத்தில் அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் என அனை வரும் பங்கேற்றுள்ளனர். வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற்றுள்ளது. எல்ஐசி பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்றார். “இதன் தொடர்ச்சியாக மக்களை யும், அரசியல் கட்சித் தலைவர்களை யும், நாடாளுமன்ற உறுப்பினர்களை யும் சந்திக்க உள்ளோம். அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் ஒன்று கூட அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிப்பார்கள்” என்றும் அவர் கூறினார். தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி. செந்தில்குமார், முதல்நிலை அதி காரிகள் சங்க மண்டல பொருளாளர் ரகு, வளர்ச்சி அதிகாரிகள் சங்க கோட்ட பொதுச்செயலாளர் ஆனந்த், மண்டல பொறுப்பாளர் பிரபாகர், மண்டல பொதுச் செயலாளர் விஜய குமார் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு முழுவதும் நடை பெற்ற இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள்-அதிகாரி கள் முழுமையாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.