கோத்தகிரி
சில ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரி அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் மர்மமான முறையில் புலி ஒன்று இறந்து கிடந்தது. அதேபோல் கோத்தகிரியில் சுருக்குக் கம்பியில் சிக்கி சிறுத்தை ஒன்று பலியானது. கடந்த மாதம் கருஞ்சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் கோத்தகிரி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் இறந்து கிடந்தது. இந்த நிலையில் கோத்தகிரி வனச்சரகத்தில் ஆண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்த தகவல் வெளியாகியுள்ளது.